இலங்கையிலிருந்து 11,000க்கும் மேற்பட்ட சிசுக்கள் ஐரோப்பாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக, இன்டர்போல் பொலிஸார் அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இலங்கைக் குழந்தைகளை விற்பனை மோசடியை நடத்தி வந்த மலேசிய தம்பதியரை அந்நாட்டு குடிவரவு அதிகாரிகள் கைது செய்ததை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இது தெரிய வந்துள்ளது.
60 முதல் 80 டொலர்களுக்கு இந்தக் குழந்தைகள் விற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மலேசிய கடவுச்சீட்டைக் கொண்ட இலங்கைக் குழந்தைகள் 6,000 முதல் 8,000 டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, 4,000 இலங்கை
சிசுக்கள் நெதர்லாந்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக, இன்டர்போல் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த
தகவலை நியூயார்க் டைம்ஸ் நாளிதழும் வெளியிட்டுள்ளது.
அதன்படி கடத்தலில் ஈடுபட்ட தம்பதிகள் இலங்கைக் குழந்தைகளுக்கான மலேசிய கடவுச்சீட்டைப் பெற்றுக்கொடுக்கச் சென்ற போதே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
