உயர்தர பரீட்சை முடிவுகள் எப்போது வெளியாகும்???….

உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களைத் திருத்துவதற்கான முதற்கட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அனைத்து பாடங்களுக்குமான உயர்தர வினாத்தாள் திருத்தும் பணிகள் முழுமையாக கடந்த திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது..

வேகமாக இந்த மாதம் முடிவுக்குள் பரீட்சை வினாத்தாள்களை திருத்தும் பணிகளை முழுமையாக முடிக்க எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது..

இந்த மாத இறுதிக்குள் திருத்தும் பணிகள் முடிக்கப்படும் பட்சத்தில் ஜூன் மாத நடுப் பகுதியில் அல்லது இறுதி வாரத்தில் பரீட்சை முடிவுகளை வெளியிடுவதற்கான சாத்திய கூறுகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..

Exit mobile version