மாத்தறையில் வெள்ளத்தினால் 6,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு…..

மாத்தறை மாவட்டத்தில் 6,000க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீரற்ற காலநிலையால் மாத்தறையில் 1,697 குடும்பங்களைச் சேர்ந்த 6,390 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.சீரற்ற காலநிலை தொடர்பான சம்பவங்களில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சீரற்ற காலநிலையால் வீடு ஒன்று இடிந்துள்ளதுடன் 39 வீடுகள் சேதமடைந்துள்ளன.கொட்டபொல மற்றும் அத்துரலிய பிரதேசங்கள் கடந்த சில நாட்களாக வெள்ளம் காரணமாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. 
Exit mobile version