திருமணத்திற்கு முன்பு கர்ப்பமாகிட்டேனு பெற்றோரிடம் கூறினேன், 72 மணிநேரம் டைம் கொடுத்தார்கள்: நடிகை நேஹா

நடிகர் அங்கத் பேடியை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே கர்ப்பமானது குறித்து பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியிருக்கிறார் பிரபல நடிகையான நேஹா தூபியா.

பாலிவுட் நடிகையும், மாடலுான நேஹா தூபியாவும், நடிகர் அங்கத் பேடியும் காதலித்து கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் திருமணம் செய்து கொண்டார்கள். அதே ஆண்டு நவம்பர் மாதம் 18ம் தேதி பெண் குழந்தையை பெற்றெடுத்தார் நேஹா. அந்த குழந்தைக்கு மெஹர் தூபியா பேடி என பெயர் வைத்தார்கள்.

மனோபாலா மறைவு : சத்யராஜ் இரங்கல்திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானதால் தான் அவசர, அவசரமாக நேஹாவுக்கும், அங்கத் பேடிக்கும் திருமணம் நடந்தது என அப்பொழுது பேச்சு கிளம்பியது. இதையடுத்து திருமணத்திற்கு முன்பு நேஹா கர்ப்பமானதை அங்கத் பேடி பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

2021ம் ஆண்டு இரண்டாவது முறையாக கர்ப்பமான நேஹா தூபியா ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அவர்கள் தங்கள் மகனுக்கு குரிக் சிங் தூபியா பேடி என பெயர் வைத்தனர்.

கணவர், குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் நேஹா. இந்நிலையில் திருமணத்திற்கு முன்பு கர்ப்பமானது குறித்து பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியிருக்கிறார்.

அந்த பேட்டியில் நேஹா தூபியா கூறியதாவது,

என் முடிவுகள் யாரையும் காயப்படுத்தவலில்லை. அப்படி இருக்கும்போது நமக்கு பிடித்ததை செய்வதில் என்ன தவறு இருக்கிறது.

எங்களின் திருமணம் திடீரென்று முடிவு செய்யப்பட்டது. திருமணத்திற்கு முன்பே நான் கர்ப்பமாகிவிட்டேன். இதையடுத்து என் பெற்றோரிடம் விஷயத்தை சொன்னபோது ஓகே, ஆனால் 72 மணிநேரத்திற்குள் இதை சரி செய்ய வேண்டும் என்றார்கள். இதையடுத்து நாங்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தோம்.

மீண்டும் மும்பைக்கு சென்று திருமணம் செய்து கொள்ள எனக்கு இரண்டரை நாள் அவகாசம் அளிக்கப்பட்டது என்றார்.

மனதில் பட்டதை செய்பவர், பேசுபவர் நேஹா தூபியா. அவர் திருமணத்திற்கு முன்பு கர்ப்பமானது குறித்து அறிந்தவர்கள் சமூக வலைதளங்களில் நேஹாவை கிண்டல் செய்தார்கள். மேலும் குழந்தை பிறந்த பிறகு நேஹாவின் எடை கூடிவிட்டது.

அதற்காகவும் நேஹாவை சமூக வலைதளங்களில் கலாய்த்தார்கள். பிரசவத்திற்கு பிறகு பெண்களுக்கு எடை அதிகரிப்பது வழக்கம் ஆகும். அப்படி இருக்கும்போது நேஹா தூபியாவை எடைக்காக கிண்டல் செய்வது நியாயம் இல்லை என்று திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் தெரிவித்தார்கள்.

திருமணத்திற்கு முன்பு கர்ப்பமானது நேஹாவின் தனிப்பட்ட விஷயம். அது குறித்து அவர் யாருக்கும் விளக்கம் அளிக்கத் தேவையில்லை. இருப்பினும் பேட்டியில் அவர் கர்ப்பம் பற்றி வெளிப்படையாக பேசியிருப்பது பாராட்டுக்குரியது என்கிறார்கள் ரசிகர்கள்.

நேஹா படங்கள் தவிர்த்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.

நேஹா நடிப்பில் கடைசியாக வெளியான பாலிவுட் படம் A Thursday. அந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். அதற்கு முன்பு ரிலீஸான வித்யுத் ஜாம்வாலின் சனக் படத்திலும் துணிச்சலான போலீஸ் அதிகாரியாக நடித்து ரசிகர்களின் கைதட்டல்களை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேஹாவின் கணவர் அங்கத் பேடி பாலிவுட் படங்கள் தவிர்த்து வெப்தொடர்களிலும் நடித்து வருகிறார். சல்மான் கானின் டைகர் 3 படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது.

முன்னாள் கிரிக்கெட் கேப்டன் பிஷன் சிங் பேடியின் மகன் தான் அங்கத் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version