மாமன்னன் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ? அப்சட்டில் உதயநிதி..என்ன காரணம் தெரியுமா ?

உதயநிதியின் மாமன்னன் திரைப்படம் நாளை திரையில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தை வெளியிடக்கூடாது என குறிப்பிட்ட ஒரு கட்சியினர் மனு கொடுத்துள்ளனர். இதன் காரணமாக மாமன்னன் படம் வெளியாவதில் சிக்கல்

பரியேறும் பெருமாள், கர்ணன் என இரு படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் தான் மாரி செல்வராஜ். தற்போது தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் இயக்குனராக உருவெடுத்துள்ள மாரி செல்வராஜ் உதயநிதியை வைத்து மாமன்னன் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

ரெட் ஜெயண்ட் சார்பாக உதயநிதியே தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். மேலும் வடிவேலு மிக முக்கியமான ரோலில் இப்படத்தில் நடிக்கின்றார். படத்தில் மாமன்னனே வடிவேலு தான் என்ற தகவல் வந்துள்ளது. இதைத்தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் வித்யாசமான ரோலில் நடித்துள்ளார்.

இவ்வாறு படத்தில் பல சிறப்பான விஷயங்கள் இருக்க ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. இதனை மேலும் அதிகரிக்கும் வகையில் மாமன்னன் படத்தின் பாடல்களும் ட்ரைலரும் அமைந்தது. இந்நிலையில் மாமன்னன் படத்திற்கு எதிர்பார்ப்புகள் இருக்கும் அதே நிலையில் சில எதிர்ப்புகளும் இருந்து வருகின்றது.

Maamannan: வேற யாரவது இருந்தா மாரி செல்வராஜ் மேல கேஸ் போட்ருப்பாங்க..பங்கமாய் கலாய்த்த வடிவேலு..!

என்னவென்றால் மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் உலகநாயகன் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவரின் முன்னிலையிலேயே மாரி செல்வராஜ் கமலின் தேவர்மகன் படத்தை விமர்சித்து பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தேவர் மகன் போன்ற ஒரு திரைப்படத்தை மாரி செல்வராஜ் விமர்சித்தது கமல் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதன் காரணமாக சமூகத்தளங்களில் மாரி செல்வராஜை கமல் ரசிகர்கள் கண்டித்து வந்தனர். இதற்கு விளக்கம் அளித்த மாரி செல்வராஜ், தான் இசை வெளியீட்டு விழாவில் சற்று எமோஷனலாக பேசிவிட்டதாகவும், கமலிடம் எனக்கு உரிமை இருப்பதால் இவ்வாறு பேசியதாகவும் கூறினார். ஆனாலும் ரசிகர்கள் சமாதானம் ஆனதாக தெரியவில்லை.

Exit mobile version