‘துணிவு’ ரிசல்ட்டை கேட்டு எச். வினோத் சொன்ன விஷயம்: என்ன மனுஷன்யா இவரு.!

‘துணிவு’ ரிலீஸ் சமயத்தில் சபரிமலையில் எச். வினோத் நடந்து கொண்ட விதம் குறித்து இயக்குனர் இரா. சரவணன் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக திகழ்கிறார் எச். வினோத். அஜித்தை வைத்து தொடர்ச்சியாக மூன்று படங்களை இயக்கியதை தொடர்ந்து தற்போது உலக நாயகன் கமலை வைத்து படம் இயக்க ஆயத்தம் ஆகி வருகிறார். இந்நிலையில் நேற்றைய தினம் தனது 42 வது பிறந்தநாளை கொண்டாடிய இயக்குனர் எச். வினோத்திற்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

அந்த வகையில் இரா. சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு ரசிகர்கள் இடையில் கவனம் ஈர்த்து வருகிறது. அதில், அ. வினோத் என்கிற அரக்கன்! அஜித் சாரின் ‘துணிவு’ ரிலீசான நேரம். இயக்குனர் வினோத்துடன் சபரிமலையில் இருந்தோம். நல்ல கூதடம் என்பதால், அருகே ஓர் அறை எடுத்து தங்கினோம். ‘துணிவு’ படம் குறித்த ரிசல்ட் பாஸிட்டிவ்வாக வந்தாலும், விமர்சனம் குறித்து தெரிந்துகொள்ள அவ்வளவு ஆவல்.

சபரிமலையில் கவரேஜ் கிடைக்கவில்லை. ‘திங்க் மியூஸிக்’ சந்தோஷ் ஒரு பக்கம், நான் ஒரு பக்கம் என கவரேஜ் தேடி ஓடிக்கொண்டு இருந்தோம். ‘படம் பக்கா..’ என விமர்சனங்கள் வர, அறைக்கு ஓடி வந்தேன். கையைத் தலையணை போல் வைத்துக்கொண்டு, கால் நீட்டித் தூங்கிக் கொண்டிருந்தார் வினோத். “யோவ் நீயெல்லாம் மனுஷனாய்யா..” என எழுப்பினேன். நல்ல உறக்கத்தில் இருந்த வினோத் சலித்தபடி நிமிர்ந்தார்.

“படத்தைக் கழுவி கழுவி ஊத்துறாங்க.. நீங்க தூங்கிட்டு இருக்கீங்க?” எனக்கேட்டேன். “ஊத்தட்டும் விடுய்யா..” என்றபடி மீண்டும் படுத்துக் கொண்டார். “ஐயோ, நண்பா படம் சூப்பர்னு கொண்டாடுறாங்க..” என்றேன். “சரிய்யா” என எழாமலே பதில் சொல்லித் தூக்கத்தை தொடர்ந்தார். அதன்பின்னர் ‘திங்க் மியூஸிக்” சந்தோஷ் வந்து ஆளை புரட்ட, அப்போதும் வேண்டா வெறுப்பாகத்தான் எழுந்தார்.

அதற்கு “நாம் செய்ய வேண்டிய வேலையை செஞ்சுட்டோம். படம் நல்லா இருந்தாலும் இல்லாட்டியும் இனி நம்மளால ஒண்ணும் பண்ண முடியாது. வாழ்த்தினாலும் வறுத்தாலும் ஏத்துக்கத்தான் வேணும்..” என்றார். அறிவில், தெளிவில் அப்படியோர் அரக்கன் வினோத். எவராலும் சலனப்படுத்த முடியாத சக்தி. ‘நல்லதும் கெட்டதும் நமக்குள்தான்’ என்று இயக்குகிற அபூர்வனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

என்ன மனுஷன்யா இவரு என ஆச்சரியத்துடனும் கூறி வருகின்றனர். ‘துணிவு’ படத்தினை தொடர்ந்து அடுத்ததாக கமலை இயக்கவுள்ளார் எச். வினோத். ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ‘KH 233’ படம் உருவாக இருக்கிறது. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள இந்தப்படத்தின் வேலைகள் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version