எளிமைக்கு மறுபெயர் என கேட்டால் தலைவரின் பெயரை சொல்லலாம் போல. அந்த அளவிற்கு எளிமையாக வாழ்கிறார், எளிமையான பழக்கவழக்கங்களை கொண்டிருக்கிறார். அப்படித்தான், சமீபத்தில் அவரின் எளிமையான செயல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் உலகளவில் பெரிய வெற்றிப்படமாக ஆனது. எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் அவரது எளிமையாய் அவர் என்றுமே விட்டதில்லை. வெளியே எதாவது நிகழ்ச்சிக்கு போகவேண்டும் என்றால் மிகவும் எளிமையாக தமிழர் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அல்லது குர்தா போன்ற உடைகளையே அணிவார் சூப்பர்ஸ்டார்.
பேருந்து ஓட்டுநராக வேலை பார்த்து வந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பின்னர் சினிமாவில் நுழைந்தார். ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பிறகு அவரது அடுத்த படத்தின் பூஜையை முடித்துவிட்டு இமயமலைக்கு சென்றார் ரஜினிகாந்த். பொதுவாகவே, அவ்வப்போது இமயமலை செல்வார் ரஜினிகாந்த். அந்த வகையில், இமயமலையிலிருந்து சென்னை வந்த ரஜினி அவர் சினிமாவிற்கு வருவதற்கு முன் நடத்துனராக வேலைபார்த்த பேருந்து நிலையத்திற்கு சென்றார். அங்கு வேலை பார்த்துவந்த பணியாளர்களுடன் புகைப்படங்களை எடுத்து அவர்களை ஆனந்தப்படுத்தினார்.
சமீபத்தில், கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் வீடியோ வைரலாகி வருகிறது. சாமி தரிசனம் செய்த பிறகு, அர்ச்சகரின் தட்டில் பணத்தை போட்டார் ரஜினி. பொதுவாகவே, கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் பர்ஸ், பேக் என வைத்திருப்பார்கள். பணம் போடா வேண்டும் என்றால், அதிலிருந்து எடுத்து போடுவார்கள். அனால் எளிமை மாறாத ரஜினி, அவரின் சட்டையில் கை பகுதியில் மடித்து வைத்திருக்கும் இடத்தில் பணத்தை வைத்திருந்தார். அர்ச்சகரின் தட்டில் அங்கிருந்து பணத்தை எடுத்து போட்டார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த விடியோவிற்கு விதவிதமான கமெண்ட்டுகளும் வருகிறது. “இதுதான் தலைவனின் ஸ்டைல், கண்டக்டரா இருந்தவாறு அதான் அதே பழக்கம், பழசை மறக்காத சூப்பர்ஸ்டார், தலைவா, இந்த எளிமை தான் தலைவா உன்கிட்ட எனக்கு புடிச்சதே ” உள்ளிட்ட கமெண்ட்டுகளுக்கு லைக்ஸ் குவிந்துவருகிறது.
இவரின் இந்த செயலுக்கு ஏற்றவாறு, இவர் நடித்திருந்த குசேலன் படத்திலேயே ஒரு பாடல் வரி உள்ளது. இந்த விடியோவை பார்த்ததும் “அவர் உருவம் பாரு எளிமை, அந்த எளிமை தானே அவருக்கு வலிமை, தலைக்கனத்திடாத தலைவன், எங்கள் அண்ணன் மட்டும் தான்” என்னும் வரிதான் நினைவிற்கு வந்தது.
