நாளை வெளியாகும் ‘மார்க் ஆண்டனி’: திருப்பதி ஏழுமலையானை தரிசத்த நடிகர் விஷால்.!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘மார்க் ஆண்டனி’ படம் நாளைய தினம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

விஷாலின் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ‘மார்க் ஆண்டனி’ படம் உருவாகியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்தின் டிரெய்லரே இணையத்தில் பட்டையை கிளப்பியுள்ளது. இதனால் நாளுக்கு நாள் இந்தப்படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எகிறியது. இந்நிலையில் நாளை திரையரங்குகளில் ‘மார்க் ஆண்டனி’ படம் வெளியாக இருக்கிறது.

தமிழ் சினிமாவில் ‘திரிஷா இல்லன்னா நயன்தாரா’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். அடல்ட் காமெடி ஜானரில் வெளியான தனது முதல் படத்திலே ரசிகர்களை கவர்ந்தார். அதனை தொடர்ந்து ‘அனபானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தை இயக்கினார். சிம்பு நடிப்பில் பல பிரச்சனைகளுக்கு மத்தியில் ரிலீசான இந்தப்படம் ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்களை குவித்தது. பாக்ஸ் ஆபிஸிலும் படு தோல்வியை சந்தித்தது இப்படம்.

இதனையடுத்து தற்போது டைம் டிராவலை மையமாக வைத்து ‘மார்க் ஆண்டனி’ படத்தை இயக்கியுள்ளார். விஷால், எஸ்.ஜே. சூர்யா இருவரும் இரட்டை வேடங்களில் நடித்துள்ள இந்தப்படத்தில் பிரபல இயக்குனர் செல்வராகவன், அபிநயா, ரிது வர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் ஜி.வி. பிரகாஷ் குமார் இந்தப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

இந்தப்படத்தின் டிரெய்லர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியானது. ரசிகர்கள் இடையில் இந்த டிரெய்லர் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. யூடிப் டிரெண்டிங்கிலும் ‘மார்க் ஆண்டனி’ டிரெய்லர் வீடியோ கலக்கியது. சமீப காலமாக தோல்வியை சந்தித்து வரும் விஷால், ஆதிக் ரவிச்சந்திரன் இருவருக்குமே இந்தப்படம் மிகப்பெரிய கம்பேக்காக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ‘மார்க் ஆண்டனி’ படம் நாளைய தினம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதனையடுத்து இன்றி நடிகர் விஷால் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும், சாமி தரிசனம் முடித்து விட்டு கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்து பேசினார் நடிகர் விஷால்.

அப்போது, ‘மார்க் ஆண்டனி’ படம் நாளை திரைக்கு வர இருக்கிறது. எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்து படத்தை இயக்கி இருக்கிறோம். இறுதியாக இன்று படத்தின் வெற்றிக்காக ஏழுமலையானை சரண் அடைந்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும், அடுத்த ஆண்டிற்குள் நடிகர் சங்க கட்டிட வேலைகளை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் நடிகர் விஷால்.

Exit mobile version