லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த மாதம் ‘லியோ’ படம் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. இதனையடுத்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘தளபதி 68’ படத்தில் நடித்து வருகிறார் விஜய். இதன் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் ‘தளபதி 68’ படத்திற்கான தாய்லாந்த் ஷெட்யூலை நிறைவு செய்துள்ளார் நடிகர் விஜய்.கடந்த மாதம் விஜய் நடிப்பில் ‘லியோ’ படம் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரிலீசான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் சாதனை படைத்தது. ‘லியோ’ படத்தின் மிரட்டலான வெற்றியை தொடர்ந்து தற்போது ‘தளபதி 68’ படத்தில் நடித்து வருகிறார் விஜய். இதன் படப்பிடிப்பு குறித்து தற்போது லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
லியோ’ வெளியீட்டுக்கு முன்பாகவே ‘தளபதி 68’ படத்தில் நடிக்க கமிட் ஆகிவிட்டார் விஜய். ஆனால் இப்படம் குறித்த அப்டேட்டை ‘லியோ’ ரிலீசுக்கு பிறகே வெளியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர் படக்குழுவினர். இதனையடுத்து ‘லியோ’ வெளியீட்டை தொடர்ந்து ‘தளபதி 68’ படத்தின் அப்டேட்களை வெளியிட்டு வருகின்றனர் படக்குழுவினர்.
இப்படத்தின் மூலமாக முதன்முதலாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார் விஜய். தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக வெவ்வேறு ஜானரில் படங்களை இயக்கி வருகிறார். அஜித்தை வைத்தும் ‘மங்காத்தா’ என்ற பிளாக் பஸ்டர் ஹிட்டை கொடுத்தார். இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளது ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது.
இதன் படப்பிடிப்பு ‘லியோ’ ரிலீசுக்கு பின்பாக துவங்கி தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக இப்படத்தின் ஷுட்டிங் தாய்லாந்து நாட்டில் நடைபெற்றது. படத்தின் முக்கியமான ஆக்ஷன் மற்றும் கார் சேஸிங் காட்சிகள் படமாக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது தாய்லாந்த் ஷெட்யூலை நிறைவு செய்து விட்டு, நடிகர் விஜய் தற்போது சென்னை திரும்பியுள்ளார்.
அவர் விமான நிலையத்தில் இருந்து வெளியில் வரும் காட்சிகள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனை இணையத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள். தாய்லாந்தில் ஷுட்டிங் நிறைவடைந்துள்ளதை தொடர்ந்து, அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
