ஆண்டுகள் மாறினாலும் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாராவுக்கும் மட்டும் ஒரேயொரு பிரச்சனை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
2023ம் ஆண்டு நேற்று தான் துவங்கியது போன்று இருக்கிறது. ஆனால் அதற்குள் ஆண்டே முடியப் போகிறது. ஆண்டு துவங்கியதும் தெரியவில்லை, முடியப் போவதும் தெரியவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு நடந்த விஷயங்களை பற்றி பலரும் பேசத் துவங்கிவிட்டார்கள். இந்த ஆண்டும் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாராவுக்கு அதே பிரச்சனை தான் ஏற்பட்டது. நயன்தாராவையும், அந்த பிரச்சனையையும் பிரிக்கவே முடியாது போன்று.
நயன்தாராவுக்கு அப்படி என்ன பிரச்சனை என்று கேட்கிறீர்களா?. அது ஒன்றும் இல்லை வதந்தி பிரச்சனை தான். நயன்தாராவை பற்றி அவ்வப்போது வதந்தி பரவிக் கொண்டே இருக்கிறது. அவரும், காதல் கணவரான விக்னேஷ் சிவனும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் இடையே பிரச்சனை. அவர்கள் விரைவில் பிரியக்கூடும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு வதந்தி பரவியது.
தன்னை பற்றி அவ்வப்போது வதந்தி பரவிக் கொண்டே இருப்பதால் அதற்கு விளக்கம் அளித்து தன் நேரத்தை வீணடிக்கவில்லை நயன்தாரா. எப்படியும் அந்த வதந்தி அடங்கிவிடும் என்பது அவருக்கு நன்றாக தெரியும். ஜவான் படம் மூலம் பாலிவுட் சென்றார் நயன்தாரா. அந்த படம் ரூ. 1000 கோடிக்கு மேல் வசூல் செய்த நிலையில் ஹீரோ ஷாருக்கான், அட்லி மீது நயன்தாரா கோபத்தில் இருப்பதாக வதந்தி பரவியது.
ஜவான் படத்தில் தன் கதாபாத்திரத்தை குறைத்துவிட்டு தீபிகா படுகோன் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்ததால் ஷாருக்கான், அட்லி மீது நயன்தாரா கோபத்தில் இருப்பதாக பேச்சு கிளம்பியது. அந்த கோபத்தில் தான் அவர் ஜவான் படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று பேசினார்கள். அப்படி எல்லாம் இல்லை. தன் அம்மாவின் பிறந்தநாளை கொண்டாட அவர் ஜவான் விழாவுக்கு செல்லவில்லை. மற்றபடி அவருக்கு யார் மீதும் வருத்தமோ, கோபமோ இல்லை.
