இந்தியாவின், தமிழ்நாடு – கோவை மாவட்டத்தில் தண்ணீரில் மூழ்கடித்து மேற்கொள்ளப்படும் கொலைமுயற்சிகள் தொடர்பில் தென்னிந்திய திரைப்பட இயக்குனர் பாக்யராஜ் குற்றம்சுமத்தியுள்ளார்.
ஆற்றில் இறங்கி நீராடுவோரின் கால்களை இழுத்து தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த பின்னர், இறந்தவரின் உடலை பாறையின் இடுக்குகளில் செருகி வைக்கும் சம்பவம் இடம்பெறுவதாக அவர் கூறியுள்ளார்.
எனினும், பாக்யராஜின் குற்றச்சாட்டை கோவை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் மறுத்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் ஆற்றில் குளிக்க செல்வோரை, சிலர் தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்வதும், அதன்பின்னர் அவர்களின் உடல்களை மீட்டுக் கொடுத்து பணம் பெறும் சம்பவங்கள் இடம்பெறுவதாக பாக்யராஜின் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
