கெஹெலிய வழக்கு – இருவருக்கு பிணை

தொழிலதிபர் நிமல் சிசிர குமார மற்றும் கெஹெலிய ரம்புக்வெல்லவின் உறவினரான பண்டார ரம்புக்வெல்ல ஆகியோரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கெஹெலிய ரம்புக்வெல்ல சட்டவிரோதமாக சம்பாதித்ததாக கூறப்படும் ரூபாய் 740 மில்லியனுக்கும் அதிகமான நிதிமோசடிக்கு உதவிய சந்தேகத்தின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இருவராலும் முன்வைக்கப்பட்ட உண்மைகளைப் பரிசீலித்த நீதிவான் தலா 5 மில்லியன் ரூபாய் ரொக்கப் பிணையில் இருவரையும் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.

இரு சந்தேக நபர்களுக்கும் வெளிநாட்டுப் பயணத் தடை விதித்திருப்பதோடு, அவர்களது கடவுச்சீட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version