கொழும்பு – ஜிந்துப்பிட்டி பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவத்தின் போது மேலும் 4 பேர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் மற்றும் சந்தேக நபர்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
குறித்த பகுதியில் உள்ள அழகு கலை நிலையமொன்றிற்குள் இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தன.
