2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகள் மூலம் மாவட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் மிக விரைவாகவும் வினைத்திறனாகவும் மேற்கொள்ளப்பட்டு பொதுமக்களுக்குத் தேவையான வசதிகள் வழங்கப்பட வேண்டும்
-பொது நிருவாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன-
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகள் மூலம் மாவட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் மிக விரைவாகவும் வினைத்திறனாகவும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும், பொதுமக்களுக்குத் தேவையான வசதிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் பொது நிருவாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன தெரிவித்தார்.
நேற்று (26) நாரஹேன்பிட்டியில் உள்ள “நில மெதுர” வளாகத்தில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டின் முதல் மாவட்ட செயலாளர்கள் மாநாட்டில் பங்கேற்று அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
பொது நிருவாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு
