மத்திய கிழக்கில் நிலவும் அமைதியற்ற சூழலைக் கருத்திற்கொண்டு, இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள், வெளிநாட்டவர்கள் தங்கியுள்ள விடுதிகள் மற்றும் பிரபலமான சுற்றுலாத் தலங்களுக்கு விசேட பாதுகாப்பை வழங்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அந்த வகையில் இலங்கையில் உள்ள இஸ்ரேலியர்களின் சபாத் இல்லங்களுக்கும் 24 மணி நேரமும் விசேட பாதுகாப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது!
