கொழும்பில் நேர்முக பரீட்சைக்காக சென்ற இளம் பெண் பட்டதாரி மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் மரணம் தொடர்பான மேலதிக சில தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த 02ஆம் திகதி யசரா ஹன்சமலி குணசேகர என்ற 28 வயதுடைய பெண் திடீரென ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
யசரா பதுளையில் வசிக்கும் இளம் பெண்ணாகும்.
பதுளை மத்திய மகா வித்தியாலயத்தில் பயின்ற யசரா, 2017 ஆம் ஆண்டு களனிப் பல்கலைக்கழகத்தில் நுழைந்தார்.
பல்கலைக் கழகக் கல்வியை முடித்து இரண்டு மாதங்களேயான நிலையில் உயிரிழந்துள்ளார்.
படிக்கும் போது தனியார் நிறுவனத்திற்கு வேலைக்காக அனுப்பிய விண்ணப்பத்திற்கமைய, நேர்முகத் தேர்வுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
நேர்முகத் தேர்வின் ஆரம்ப பகுதி முடிந்துவிட்டாலும், இன்னொரு கட்ட நேர்முக தேர்வ இருப்பதால் இன்னும் ஓரிரு நாட்கள் கொழும்பில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அந்த இரண்டு மூன்று நாட்களும் தன் பல்கலைகழக நண்பர்கள் தங்கியிருக்கும் விடுதியிலேயே தங்கிவிடலாம் என்று முடிவு செய்து அங்கு சென்றுள்ளார்.
அவர் தனது நண்பர்களுடன் நேரத்தை செலவிட்டு வந்த நிலையில் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக, இரவு 10.30 மணியளவில் அவரது நண்பர்கள் ராகம வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போதிலும் கடந்த 2ஆம் திகதி அவர் உயிரிழந்துள்ளார்.
மரணத்திற்கான காரணம் இதுவரையில் உத்தியோகபூர்வமான வெளியிடாத நிலையில் உடற் பாகங்கள் பகுப்பாய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் இது பற்றி விசாரித்து பார்த்ததில் ,
படிக்கும் போது அதே பல்கலைக்கழகத்தில் படித்த இளைஞனுடன் ஏற்பட்ட காதல் பிரச்னையால், பல்கலைக்கழக வளாகத்தில் மருந்து வகைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதாக தகவல் கிடைத்ததாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உயிரிழந்த யுவதியின் பிரேத பரிசோதனை மற்றும் திடீர் மரண விசாரணைகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை கிரிபத்கொட காவல்துறையின் பல்வேறு முறைப்பாடு விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டுள்ளனர்.




Discussion about this post