இலங்கைக்கு தென்மேற்காக நகர்ந்திருக்கும் மேலடுக்கு சுழற்சியானது இன்று நள்ளிரவுக்குள் இலங்கை கடற்பரப்பு வலையத்தை விட்டு அகன்று மாலைதீவுகளுக்கு செல்லவுள்ளது. இதன் பயனாக கடந்த இரண்டு நாட்களாக கிழக்கு மாகாணம் முழுவதும் கொட்டித் தீர்க்கும் கனமழையின் தாக்கம் இன்று நள்ளிரவுடன் சீரடையும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
ஏற்கனவே வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் மேலும் பதற்றப்படாமல் நாளைமுதல் அடுத்த கட்ட மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
மேலும் தற்போது வடக்கில் காணப்படும் மேகமூட்டம் மற்றும் துமி தூறலுடன் கூடிய வானிலை முற்றுமுழுதாக நீங்கி, நாளை வியாழன் முதல் இரவில் பனிக்குளிரும் பகலில் வெயிலுடனும் கூடிய வறண்ட வானிலையும் நிலவுமென எதிர்பார்க்கபடுகிறது.











Discussion about this post