இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) நீண்டகால வரலாற்றில் இதுவரை எழுதப்படாத ஒரு புதிய அத்தியாயத்தை அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசு நேற்று தொடங்கி வைத்துள்ளது.
பல ஆண்டுகளாக ஆண்கள் மட்டுமே இ.போ.ச (SLTB) பஸ்களில் நடத்துனர்களாக பணியாற்றி வருகின்றனர், ஆனால் முதன்முறையாக பெண் நடத்துனர்கள் உத்தியோகபூர்வமாக களம் இறக்கப்பட்டுள்ளனர்.
முதற்கட்டமாக 20 பெண்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டு, அவர்கள் சீருடை அணிந்து பணியில் இணைந்துள்ளனர்.
சாதாரணமாக இல்லாமல், மிகவும் கௌரவமான மற்றும் நேர்த்தியான புதிய சீருடையுடன் இவர்கள் வலம் வரவுள்ளனர். ஆரம்பமாக மாகும்பர – கடுவலை அதிவேக நெடுஞ்சாலை பஸ்களில் இவர்களது பயணம் தொடங்குகிறது.
இதனூடாக…
பெண்களுக்கு பாதுகாப்பு – பேருந்துகளில் பயணம் செய்யும் பெண் பயணிகள் மற்றும் மாணவிகளுக்கு இது கூடுதல் பாதுகாப்பையும், சௌகரியத்தையும் வழங்கும்.
சவாலான களம் – நெரிசலான நேரங்களில் பஸ்களில் டிக்கெட் வழங்குவது சாதாரண காரியமல்ல, அந்த சவாலை ஏற்க பெண்கள் முன்வந்திருப்பது பாராட்டுக்குரியது.
மாற்றத்தின் அடையாளம் – “பெண்கள் வீட்டுக்குள் இருக்க வேண்டியவர்கள் அல்ல, அவர்கள் நாட்டைக் கட்டியெழுப்பும் சக்திகள்” என்பதை இந்த நியமனம் உறுதிப்படுத்தியுள்ளது.











Discussion about this post