ஹார்முஸ் ஜலசந்தியில் கச்சா எண்ணெய் கப்பல்கள் தவிப்பு!
ஈரான் கட்டுப்பாட்டில்தான் ஹார்முஸ் ஜலசந்தி இருக்கிறது. இந்த ஜலசந்தியை ஈரான் அரசு திடீரென மூடிவிட்டது. இதன் வழியாகத்தான் ஆசியாவில் உள்ள பெரும்பாலான நாடுகளுக்கு கப்பல்கள் மூலம் கச்சா எண்ணெய் எடுத்துச் செல்லப்படுகிறது.
தற்போது இந்த நீர் வழித்தடம் மூடப்பட்டுள்ளதால் வளைகுடா நாடுகளில் இருந்து ஆசிய நாடுகளுக்கு கப்பல் மூலம் கச்சா எண்ணெய்யை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியை கடப்பதற்காக 700-க்கும் மேற்பட்ட கப்பல்கள் அணிவகுத்து நிற்கின்றன. கடலிலேயே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை துறைமுகத்திற்கு கச்சா எண்ணெய் ஏற்றி வரும் 2 பிரம்மாண்ட கப்பல்களும் அங்கு அணிவகுத்து நிற்கின்றன.
மேலும் இந்தியாவுக்கு சொந்தமான 59 கப்பல்களும் அதில் 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாலுமிகளும் சிப்பந்திகள் 700 கப்பல்களில் சிக்கித் தவிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் வரத்து குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.



Discussion about this post