கொழும்பின் புற நகர் பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை (29) பத்து மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி காலை 11 மணி முதல் இரவு 9 மணிவரை நீர் வெட்டு அமுலாகவுள்ளது.
👉கொலன்னாவ நகரசபை பகுதி,
👉மொரகஸ்முல்ல,
👉ராஜகிரிய,
👉ஒபேசேகரபுர,
👉பண்டாரநாயக்கபுர,
👉அத்துல்கோட்டே,
👉நாவல,
👉கொஸ்வத்தை மற்றும்
👉ராஜகிரியவில் இருந்து நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையான பிரதான வீதி மற்றும் அதனுடன் இணைந்த அனைத்து வீதிகளிலும் நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.
கொலன்னாவ நீர்விநியோக நிலையத்தின் பிரதான கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
