சிறிலங்காவில் அதிகரிக்கும் சிறுவர் தொழிலாளர்களின் எண்ணிக்கை..!

சிறிலங்காவில் சிறுவர் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சிறிலங்கா தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் சமூக சூழ்நிலைகள் காரணமாக சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்பப்படுவதாக அதிகார சபையின் அதிகாரியொருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது சட்டவிரோத செயலாக கருதப்பட்டாலும் , அது தொடர்ந்தும் நடைபெற்று வருவதாக சிறிலங்கா தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில், பொருளாதார நெருக்கடியால் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களில் உள்ள சிறுவர்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக விருப்பமின்றி வேலைக்கு அனுப்பபடுவதாக அதிகாரசபையின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version