புத்த பெருமானை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட நகைச்சுவை நடிகர் நடாஷா எதிரிசூரியவுக்கு எதிர்வரும் ஜுலை 5 ஆம் திகதிவரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
புத்த பெருமானை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டிருந்த நகைச்சுவை நடிகர் நடாஷா எதிரிசூரிய, கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கடந்தமாதம் கைது செய்யப்பட்டிருந்தார்.
குறித்த சம்பவமானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, தனது கருத்து குறித்து மன்னிப்புக் கோரிய அவர், சிங்கப்பூருக்கு செல்வதற்காக கட்டுநாயக்க விமானநிலையத்திற்கு வருகைத் தந்தபோதே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
அத்தோடு, இவரது கருத்தை ஒளிபரப்பு செய்த ‘ளுடு ஏடுழுபு’ என்ற யூடியூப் தளத்தின் உரிமையாளர் புருனோ திவாகரனும் கைதுசெய்யப்பட்டனர்.
இந்த நிலையில், இவர்கள் இருவரும் இன்று கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது நகைச்சுவை நடிகர் நடாஷா எதிரிசூரியவை எதிர்வரும் ஜூலை மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த யூடியூப் தளத்தில் உரிமையாளர் புருனோ திவாகர நிபந்தனையுடன் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.




Discussion about this post