அமைதியை நிலைநாட்ட சகல ஆயுதப்படையினரையும் அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு!

நாட்டில் பொது அமைதியை நிலைநாட்ட சகல ஆயுதப்படையினரையும் அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாற்பதாவது அதிகாரம் கொண்ட பொது பாதுகாப்புச் சட்டத்தின் பன்னிரண்டாவது பிரிவின்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version