ஜூலை முதல் டிஜிட்டல் மின் கட்டணம்

03 பகுதிகளில் உள்ள மின் பாவனையாளர்களுக்கு டிஜிட்டல் முறையில் மின் கட்டணம் வழங்கும் முறை ஜூலை முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்பட உள்ளது.

குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் ஊடாக இலத்திரனியல் பில் ஒன்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

தெஹிவளை, களனி மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பிரதேசங்களில் வசிக்கும் மின்சார பாவனையாளர்களுக்காக இந்த முறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

Exit mobile version