இளம் தாய் மற்றும் அவரது குழந்தை ஆகியோர் சடலங்களாக மீட்பு!

ஹொரண – அங்குருவாதொட்ட – ரத்மல்கொட வனப்பகுதியிலிருந்து இளம் தாய் மற்றும் அவரது குழந்தை ஆகியோர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய 24 வயதுடைய இளம் தாய் ஒருவரும் அவரின் 11 மாதங்களேயான குழந்தையுமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை கடந்த 18 ஆம் திகதி குறித்த இருவரையும் காணவில்லை என அவரின் கணவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது

Exit mobile version