இந்த நாட்டிலுள்ள மருந்துகள் விநியோகஸ்தர்களில், எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரின் மருமகனுக்கு சொந்தமான நிறுவனமே சுகாதார அமைச்சுக்கு அதிகளவான குறைபாடுள்ள மருந்துகளை வழங்கியுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.
இதன்படி, கடந்த காலங்களில் வழங்கப்பட்ட மருந்துகளில் 10% – 24% குறைபாடுள்ளவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் இந்நிறுவனம் வழங்கிய கணிசமான எண்ணிக்கையிலான மருந்துகள் தரமற்றவை.
2015-2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சுகாதார அமைச்சுக்கு அவர்கள் வழங்கிய மருந்துகளை ஆராயும் போது இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கீழே தரப்பட்டுள்ள அட்டவணையில் குறித்த நிறுவனம் மருந்துகளை வழங்கிய ஆண்டு, வழங்கப்பட்ட மருந்துகள், அதில் தோல்வியடைந்தவை சதவீதம் என முறையே வழங்கப்பட்டுள்ளது.
