தொலைபேசிக்கு அடிமையாவதால் சிறுவர்களுக்கு ஞாபக மறதி ஏற்படும் அபாயம்

சிறுவர்கள் கையடக்கத் தொலைபேசி மற்றும் இணையத்தளத்திற்கு கடுமையாக அடிமையாதால் ஞாபக மறதி ஏற்படும் அபாயம் காணப்படுவதாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் உளவியலாளர் வைத்தியர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார்.

வீடியோ கேம்களுக்கு குழந்தைகள் அடிமையாகிவிடுவது ஒரு தீவிரமான நிலை மற்றும் மனநோய் என அவர் சுட்டிக்காட்டினார்.

இதனால் குழந்தைகள் கல்வியில் தோல்வி அடைவதுடன் அவர்களின் பெற்றோரை எதிரிகளாகப் பார்க்கிறார்கள் என்று மனநல மருத்துவர் கூறியுள்ளார்.

குழந்தைகள் கையடக்கத் தொலைபேசி மற்றும் இணையத்தைப் பயன்படுத்தும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும், இந்த பழக்கத்தினால் அவர்களின் எதிர்காலம் முற்றாக அழிக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version