லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் தளபதி விஜய்யின் மகன் இயக்குனராக அறிமுகமாகவுள்ள படத்தில் யார் ஹீரோவாக நடிக்க போகிறார் என்பது தான் ரசிகர்களின் தற்போதைய மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் விஜய். கோலிவுட் சினிமாவில் தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்து வரும் இவரின் மகன் ஜேசன் சஞ்சய்யை ஹீரோவாக்க பல முயற்சிகள் நடந்து வந்தது. ஆனாலும் அவர் இயக்குனாராக தான் ஆவேன் என்பதில் உறுதி இருந்தது. அதன்படி தற்போது தமிழ் சினிமாவில் ஜேசன் சஞ்சய் ஹீரோவாக அறிமுகம் ஆவதும் உறுதியாகிவிட்டது.
கோலிவுட்டில் டாப் ஹீரோவாக வலம் வருகிறார் விஜய். இவருக்கு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் உள்ளது. தற்போது விஜய் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்யை ஹீரோவாக்க பல முன்னணி இயக்குனர்கள் முயற்சி செய்து வந்தனர்.
ஆனாலும் அவர் வெளிநாட்டில் சினிமா மேக்கிங் குறித்த கோர்ஸ் படித்துவிட்டு இயக்குனராகும் முடிவில் இருந்தார். தொடர்ந்து சில குறும்படங்கள் இயக்கி வந்தார். இந்நிலையில் தான் தற்போது இயக்குனராக அறிமுகமாகவுள்ளார் ஜேசன் சஞ்சய். இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
லைகா நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன் முன்னிலையில் ஜேசன் சஞ்சய் கையெழுத்திட்ட போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகின. இந்த வாய்ப்பு குறித்து, ‘என் முதல் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கும் வாய்ப்பு கிடைத்ததில் எனக்கு கவுரவம். எனக்கு இந்த வாய்ப்பை அளித்த சுபாஸ்கரன் சாருக்கு நன்றி’ என தெரிவித்துள்ளார் ஜேசன் சஞ்சய்.
இந்நிலையில் இந்தப்படத்தின் ஹீரோ யார் என்பது குறித்த பேச்சுக்கள் தான் சோஷியல் மீடியா முழுக்க வைரலாகி வருகின்றன. மேலும், ஜேசன் சஞ்சய் தன்னுடைய முதல் படத்திலே விஜய் சேதுபதியை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் சோஷியல் மீடியா முழுக்க வைரலாகி வருகின்றன. அப்பா விஜய்யை விட்டுட்டு விஜய் சேதுபதியை ஜேசன் சஞ்சய் இயக்கவுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி தான் ரசிகர்களிடையே ஒரே பேச்சாக உள்ளது.
இதனிடையில் லைகா தயாரிப்பில் உருவாகும் படம் என்பதால் ஏகேவை வைத்து ஜேசன் சஞ்சய் படம் இயக்கினால் எப்படி இருக்கும் என்றும் ரசிகர்கள் தங்களுடைய ஆசைகளை வெளிப்படுத்தி வருகின்றன. இவ்வாறு பலரும் தங்களுடைய ஆசைகளை கூறி வந்தாலும் படக்குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பின்பு தான் ஜேசன் சஞ்சய் யாரை முதலில் இயக்க போகிறார் என்பது உறுதியாக தெரிய வரும்.
