166,938 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி

2022 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய 166,938 மாணவர்கள் அரச பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்கான தேவையை பூர்த்தி செய்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, 2022 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 149,487 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 17,451 தனியார் விண்ணப்பதாரர்களும் பல்கலைக்கழக அனுமதிக்கு தேவையான சித்திகளைப் பெற்றுள்ளனர்.

Exit mobile version