தேசிய கல்வியியல் கல்லூரி மாணவர் அனுமதி ஆகஸ்ட் 31 க்கு முன்னர் என குறிப்பிடப்பட்டும் அதற்கான நடவடிக்கைகள் இதுவரை எடுக்கப்படவில்லை..

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான 2019/2020 உயர் தரம் தோற்றியவர்களை கல்வியியல் கல்லூரி நேர்முக தேர்வுக்கு 2023 ம் ஆண்டு 1ம் , 2ம் மாதங்களில் இடம்பெற்றது. தெரிவாகிய பெயர் பட்டியல் 2023 July மாதம் வெளியாகியது, அதன்படி 7000 மாணவர்கள் கல்வியியல் கல்லூரிக்கு தெரிவாகினர்..

தகைமை பெற்றவர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகளை ஆகஸ்ட் 31 க்கு முன்னர் நிறைவு செய்யுமாறு கல்வி அமைச்சின் செயலாளர், கல்வியியல் கல்லூரிகளின் பீடாதிபதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதற்கு முன்னர் பல தடவைகள் இவ்வாறு அறிவித்த போதிலும், இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் அதிகாரிகள் (கல்லூரி விரிவுரையாளர்கள்) சில கோரிக்கைகளை கல்வி அமைச்சிடம் தெரிவித்து தொடர்ந்தும் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் முக்கியமாக சம்பள முரண்பாட்டை தீர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..

எனவே கல்வி அமைச்சின் அறிவித்தல்கள் எதுவும் நடைமுறைப்படுத்தப்பட வில்லை.

இதனால் கல்வியியல் கல்லூரிக்கு தெரிவாகிய மாணவர்கள் பல இன்னல்களை நோக்குகின்றனர்…
குறிப்பாக கல்வியியல் கல்லூரி படிப்பை முடித்து வரும் போது 25,26 வயதை தாண்டுவதோடு, மாணவர்களை பதிவு செய்வது தொடர்பாக முறையான அறிவித்தல்கள் இல்லாமையால் பலர் தனது வேலைகளை விட்டும், பலர் வேலைகளுக்கு செல்ல முடியாமல் வீட்டில் இருப்பதாலும் குடும்பத்தில் பாரிய பொருளாதார சிக்கல் நிலவுவது கவலைக்கிடமாக உள்ளது…

மாணவர்களின் மன நிலை மற்றும் அவர்களின் வாழ்க்கையை எண்ணி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வியியல் கல்லூரிக்கு தெரிவாகிய மாணவர்கள் கோரிக்கை விடுகின்றனர்.

Exit mobile version