அடுத்த ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் குறித்து விசேட அறிவிப்பு

பாடசாலை செயற்பாடுகள் அடுத்த ஆண்டு ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் பாடப்புத்தகங்களை பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

ஹோமாகம, பிடிபனவில் அமைந்துள்ள கல்வி வெளியீடுகள் திணைக்களத்தின் பிரதான களஞ்சியசாலையில் இருந்து நாடளாவிய ரீதியில் உள்ள பிராந்திய மத்திய நிலையங்களுக்கு பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்படும் இடத்தை பார்வையிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு மட்டுமே பாடசாலை சீருடைப் பொருட்கள் வழங்கப்படும் என பல்வேறு ஆர்வமுள்ள தரப்பினர் பரப்பும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் அமைச்சர் நிராகரித்துள்ளார்.

சீருடை துணிகள் மற்றும் மதிய உணவு ஆகிய இரண்டும் வழமை போன்று தாமதமின்றி வழங்கப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

இந்த அனைத்து பௌதீக வசதிகளையும் வழங்குவதற்கான எதிர்பார்ப்பு 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் சரியான நேரத்தில் பாடத்திட்டத்தை உள்ளடக்கியது மற்றும் கொவிட் 19 தொற்றுநோய்களின் போது சீர்குலைந்த அனைத்து கல்வி நடவடிக்கைகளையும் மீட்டெடுப்பதாகும்.

கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, இந்த ஆண்டு பாடசாலை பாடப்புத்தக அச்சிடும் பணியை, குறைந்த செலவில், உரிய நேரத்தில் செய்து முடித்ததால் 4,000 மில்லியன் ரூபாவை அரசிற்கு வழங்க முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.

அரச அச்சு நிறுவகம் (SPC) இலாபம் ஈட்டத் தொடங்கியுள்ளது என்றும், எதிர்காலத்தில், அனைத்து பாடசாலை பாடப்புத்தகங்கள், பயிற்சி புத்தகங்கள் மற்றும் பிற அரச ஆவணங்களை அச்சிடுவதற்கு அரச அச்சகத்துக்கு வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த நாட்டில் கல்வி சீர்திருத்தங்களை உறுதிப்படுத்துவதற்கு, இந்த நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களின் ஆதரவும் அர்ப்பணிப்பும் இன்றியமையாதது என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version