பேருந்து கட்டணத்தை உயர்த்த கோரிக்கை..!

டீசல் விலை அதிகரிப்பு காரணமாக தனியார் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என,

அகில இலங்கை தனியார் வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் கூறுகையில், பேருந்து கட்டணத்தை குறைந்தது 5% அதிகரிக்க வேண்டும்.

நேற்று (01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஆட்டோ டீசலின் விலை 10 ரூபாவாலும், சுப்பர் டீசலின் விலை 62 ரூபாவாலும் உயர்த்த சிபெட்கோ மற்றும் லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தன.

Exit mobile version