CE A/L 2023 ஜனவரி 4, 2024 முதல் ஜனவரி 31, 2024 வரை நடைபெறும் என கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளது.
திட்டமிடப்பட்ட 2023 க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் ஒத்திவைக்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த செப்டம்பர் மாதம் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
மாணவர்கள் பரீட்சைக்குத் தயாராவதற்கு போதிய கால அவகாசம் இல்லை என ஆளும் மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து பரீட்சைகள் பிற்போடப்பட்டதாக அமைச்சர் அப்போது தெரிவித்தார்.
2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நவம்பர் 27 ஆம் திகதி முதல் டிசம்பர் 2 ஆம் திகதி வரை நடைபெறுவதற்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது.
