சுங்கத் திணைக்களத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகை போதைப்பொருள் மீட்பு

ரூ.122 மில்லியன் பெறுமதியான 16 கிலோ குஷ் மற்றும் 01 கிலோ ஐஸ் போதைப்பொருள் அடங்கிய மூன்று பொதிகள் இலங்கை சுங்கத் திணைக்களத்தில் உள்ள பொதிகள் அகற்றும் பிரிவில் இருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பேலியகொட – இலங்கை சுங்கத் திணைக்களத்தில் உள்ள பொதிகள் அகற்றும் பிரிவில் ரூ.122 மில்லியன் பெறுமதியான 16 கிலோ குஷ் மற்றும் 01 கிலோ ஐஸ் போதைப்பொருள் அடங்கிய மூன்று பொதிகளை இலங்கை சுங்க அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

இது குறித்து விரிவான விசாரணைகளை இலங்கை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version