காலி, மாத்தறை மாவட்ட பாடசாலைகள் நாளை ஆரம்பம்

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளில் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதன்படி, குறித்த பாடசாலைகள் நாளைய (11) தினம் ஆரம்பிக்கப்படுமென தென் மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

சீரற்ற வானிலை காரணமாக மாத்தறை மாவட்ட பாடசாலைகள் 5 ஆம் திகதி முதல் மூடப்பட்டன.

அத்துடன், காலி மாவட்ட பாடசாலைகள் நேற்று (09) மற்றும் இன்று(10) ஆகிய இறுதினங்களில் மூடப்பட்டிருக்குமென அறிவிக்கப்பட்டது.

தென் மாகாணத்தில் மழை குறைவடைந்துள்ள நிலையில், பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version