அட்டைகள் பற்றாக்குறை மற்றும் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், மோட்டார் போக்குவரத்து துறையில் அச்சிடுவதற்காக குவிந்துள்ள சாரதி அனுமதிப்பத்திரங்களின் எண்ணிக்கை, ஒன்பது இலட்சத்தை தாண்டியுள்ளது.
அந்நியச் செலாவணி பற்றாக்குறையால், ஓராண்டுக்கு முன், சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிட, அட்டைகளை இறக்குமதி செய்ய முடியாத நிலை இருந்த நிலையில், பின்னர், அவுஸ்திரேலியாவிலிருந்து, 10 இலட்சம் அட்டைகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
