முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர எல்லைக்குள் சபை அதிகாரத்தின் கீழ் இயங்கும் அனைத்து முன்பள்ளி ஆசிரியர்களுக்கே சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய வாழ்க்கைச் செலவு அதிகரிப்பைக் கருத்தில் கொண்டும், முன்பள்ளி ஆசிரியர்களின் சேவையை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
