Tuesday, February 10, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home இலங்கை

ஜனாதிபதி நிதியம் பிரதேச செயலகங்களுக்கு பரவலாக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டதன் மூலம், ஒரு வருடத்திற்குள் மருத்துவ உதவி விண்ணப்பங்கள் 59% அதிகரிப்பு

by editor
February 9, 2026
in இலங்கை
0 0
A A
0
மே 2024 முதல் உதவித்தொகை கொடுப்பனவுகள் – ஜனாதிபதி நிதி
Share on FacebookShare on Twitter

70% க்கும் அதிகமான விண்ணப்பதாரர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கி முடிப்பு

விண்ணப்பங்கள் கிடைப்பதில் பதிவான முன்னேற்றம்:

• வட மாகாணம்: 253%

• கிழக்கு மாகாணம்: 135%

• மத்திய மாகாணம்: 116%

• ஊவா மாகாணம்: 108%

ஜனாதிபதி நிதியம் பிரதேச செயலகங்களுக்கு பரவலாக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டதன் விளைவாக, ஒரு வருட காலப்பகுதிக்குள் மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்கள் கிடைப்பது 59% இனால் அதிகரித்துள்ளது.

இதற்கமைய, 2025 ஆம் ஆண்டில் ஜனாதிபதி நிதியத்திற்கு 5,277 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. 2024 ஆம் ஆண்டில் 3,313 விண்ணப்பங்களும், 2023 ஆம் ஆண்டில் 3,456 விண்ணப்பங்களும் கிடைத்துள்ளன.

ஜனாதிபதி நிதியத்தை பிரதேச செயலகங்களுக்கு பரவலாக்கல் மற்றும் டிஜிட்டல் மயமாக்கலின் பலனாக, 2024 ஆம் ஆண்டை விட 2025 ஆம் ஆண்டில் மேலதிகமாக 1,964 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. இந்த விண்ணப்பதாரர்களில் 70% க்கும் அதிகமானோருக்கு இதுவரையில் மருத்துவ உதவிகள் வழங்கி முடிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி நிதியத்திலிருந்து மருத்துவ உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களுக்கும் விண்ணப்பங்கள் வந்தவண்ணம் உள்ளன. 2025 ஆம் ஆண்டில் வட மாகாணத்திலிருந்து விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படுவது 253% வீதத்தினால் அதிகரித்துள்ளதுடன், கிழக்கு மாகாணத்தில் 135% இனாலும், மத்திய மாகாணத்தில் 116% இனாலும் மற்றும் ஊவா மாகாணத்தில் 108% இனாலும் விண்ணப்பங்கள் கிடைப்பது அதிகரித்துள்ளது.

பொதுமக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கும் ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளுக்கான விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள், 2025 பெப்ரவரி 07 ஆம் திகதி முதல் நாட்டின் அனைத்து பிரதேச செயலகங்கள் ஊடாகவும் ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டம் மிகவும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதால், ஜனாதிபதி நிதியத்தின் ஏனைய சேவைகளையும் பரவலாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, வறுமை ஒழிப்பு நிவாரணகள், கல்வி புலமைப்பரிசில் வழங்கல், கல்வியில் திறமை காட்டும் மாணவர்களை பாராட்டுதல், விசேட தேவையுடையோருக்கான நிதிஉதவிகள், காட்டுயானை தாக்குதலினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கான நிவாரணக் கொடுப்பனவுகள், தேசிய ரீதியில் நாட்டுக்காக சேவையாற்றியவர்களைக் கௌரவித்தல், விபத்துக்கள் மற்றும் அனர்த்தங்களின் போது வழங்கப்படும் நிவாரணங்கள் உள்ளிட்ட ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் அனைத்து சேவைகளையும் ஒன்லைன் (Online) மூலம் அணுகுவதற்கு பொதுமக்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதாவது, 47 வருட காலமாக கொழும்பிற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த ஜனாதிபதி நிதியத்தின் அனைத்து சேவைகளையும், எந்தவொரு பிரதேச செயலகத்தின் ஊடாகவும் விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பு, நன்மைகளை எதிர்பார்க்கும் மக்களுக்கு தற்போது கிடைத்துள்ளது.

Related Posts

2023 மார்ச்04ஆம் திகதிக்கான  வானிலை முன்னறிவிப்பு
இலங்கை

2026 பெப்ரவரி 09ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

February 9, 2026
வார இறுதி நாட்களில் இரண்டு மணித்தியாலங்கள் மின்வெட்டு!
இலங்கை

மின்சாரம் தாக்கி தாயும் மகளும் உயிரிழப்பு.!

February 9, 2026
2023 வரவு செலவுத் திட்டம் : இன்று ஐந்தாம் நாள் விவாதம்!
இலங்கை

பொது அவசரகால சட்டம் மேலும் நீடிப்பு!

February 9, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
மே 2024 முதல் உதவித்தொகை கொடுப்பனவுகள் – ஜனாதிபதி நிதி

ஜனாதிபதி நிதியம் பிரதேச செயலகங்களுக்கு பரவலாக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டதன் மூலம், ஒரு வருடத்திற்குள் மருத்துவ உதவி விண்ணப்பங்கள் 59% அதிகரிப்பு

February 9, 2026
2023 மார்ச்04ஆம் திகதிக்கான  வானிலை முன்னறிவிப்பு

2026 பெப்ரவரி 09ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

February 9, 2026
வார இறுதி நாட்களில் இரண்டு மணித்தியாலங்கள் மின்வெட்டு!

மின்சாரம் தாக்கி தாயும் மகளும் உயிரிழப்பு.!

February 9, 2026
2023 வரவு செலவுத் திட்டம் : இன்று ஐந்தாம் நாள் விவாதம்!

பொது அவசரகால சட்டம் மேலும் நீடிப்பு!

February 9, 2026

Recent News

மே 2024 முதல் உதவித்தொகை கொடுப்பனவுகள் – ஜனாதிபதி நிதி

ஜனாதிபதி நிதியம் பிரதேச செயலகங்களுக்கு பரவலாக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டதன் மூலம், ஒரு வருடத்திற்குள் மருத்துவ உதவி விண்ணப்பங்கள் 59% அதிகரிப்பு

February 9, 2026
2023 மார்ச்04ஆம் திகதிக்கான  வானிலை முன்னறிவிப்பு

2026 பெப்ரவரி 09ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

February 9, 2026
வார இறுதி நாட்களில் இரண்டு மணித்தியாலங்கள் மின்வெட்டு!

மின்சாரம் தாக்கி தாயும் மகளும் உயிரிழப்பு.!

February 9, 2026
2023 வரவு செலவுத் திட்டம் : இன்று ஐந்தாம் நாள் விவாதம்!

பொது அவசரகால சட்டம் மேலும் நீடிப்பு!

February 9, 2026

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version