Sunday, June 21, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home இலங்கை

அஸ்வெசும திட்டம் தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு

by editor
March 7, 2026
in இலங்கை
0 0
A A
0
அஸ்வெசும திட்டம் தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு
Share on FacebookShare on Twitter

அஸ்வெசும நலத்திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023 ஆண்டுகளில்) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் பயன் பெறாதவர்களின் தகவல்களை புதுப்பிக்கும் பணிகள் தற்போது நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

நலன்புரி நன்மைகளைப் பெறும் நபர்களின் பெயர் பட்டியல் வருடாந்தம் புதுப்பிக்கப்படுவது கட்டாயமானதால் இந்த தகவல் புதுப்பிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த செயல்முறையின் கீழ் தகுதியுடைய 2,993,558 பேர் ஏற்கனவே தங்களின் தகவல்களை சமர்ப்பித்துள்ளனர். அவர்களால் வழங்கப்பட்ட தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்காக பொறுப்பான கணக்கெடுப்பு அதிகாரிகள் பயனாளிகளின் வீடுகளுக்குச் சென்று அவர்கள் வழங்கிய தகவல்களை சரிபார்த்து உறுதிப்படுத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கணக்கெடுப்பு பணிகள் மார்ச் 28 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தயாராக வைத்திருக்க வேண்டிய ஆவணங்கள்

கணக்கெடுப்பு நடைபெறும் போது பின்வரும் ஆவணங்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது:

  • குடும்பத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரின் தேசிய அடையாள அட்டைகள்
  • கடந்த 3 மாதங்களுக்கான மின்சார கட்டண ரசீதுகள்
  • காணி உரிமை ஆவணங்கள்
  • வாகன உரிமைப் பத்திரங்கள் (இருப்பின்)
  • மருத்துவச் சான்றிதழ்கள் (இருப்பின்)

மேலும், முதியோர் கொடுப்பனவு, ஊனமுற்றோர் கொடுப்பனவு மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்கான உதவித் தொகை கோரி விண்ணப்பித்தவர்களின் தகவல்களும் இந்த கணக்கெடுப்பில் சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவறான தகவல்களுக்கு தண்டனை

இந்த செயல்முறையில் தவறான தகவல்களை வழங்குவது சட்டப்படி குற்றமாகும். தவறான தகவல்கள் வழங்கப்பட்டதாக உறுதியாகின், நீதவான் முன்னிலையில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டவர்களுக்கு 5,000 ரூபாய்க்கு அதிகப்படாத அபராதம், அல்லது ஒரு ஆண்டு வரை சிறைத்தண்டனை, அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

Related Posts

இலங்கையில் பெரசிட்டமோல் மருந்துக்குகூட கடுமையான தட்டுப்பாடு – GMOA
இலங்கை

சில மருந்துகளின் விலைகள் அதிகரிப்பு?

June 5, 2026
கதிர்காமம் சென்று திரும்பும் வழியில் விபத்து! 15 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் !
இலங்கை

புத்தளத்தில் கொடூர விபத்து: தாயும் மகளும் பரிதாபமாக உயிரிழப்பு!

June 5, 2026
முச்சக்கரவண்டி மீது மரம் முறிந்து வீழ்ந்து விபத்து – மூவர் உயிரிழப்பு!
இலங்கை

முச்சக்கரவண்டி மீது மரம் முறிந்து வீழ்ந்து விபத்து – மூவர் உயிரிழப்பு!

June 5, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022
ஆசிரியர்களுக்கான வெற்றிடம்

ஆசிரியர்களுக்கான வெற்றிடம்

October 4, 2023

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
இலங்கையில் பெரசிட்டமோல் மருந்துக்குகூட கடுமையான தட்டுப்பாடு – GMOA

சில மருந்துகளின் விலைகள் அதிகரிப்பு?

June 5, 2026
கதிர்காமம் சென்று திரும்பும் வழியில் விபத்து! 15 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் !

புத்தளத்தில் கொடூர விபத்து: தாயும் மகளும் பரிதாபமாக உயிரிழப்பு!

June 5, 2026
2ஆவது ஆர்ப்பாட்டக்காரருக்கும் ஈரானில் தூக்கு

ஈரான் போர் – அமெரிக்க சபையில் முக்கிய தீர்மானம்

June 5, 2026
முச்சக்கரவண்டி மீது மரம் முறிந்து வீழ்ந்து விபத்து – மூவர் உயிரிழப்பு!

முச்சக்கரவண்டி மீது மரம் முறிந்து வீழ்ந்து விபத்து – மூவர் உயிரிழப்பு!

June 5, 2026

Recent News

இலங்கையில் பெரசிட்டமோல் மருந்துக்குகூட கடுமையான தட்டுப்பாடு – GMOA

சில மருந்துகளின் விலைகள் அதிகரிப்பு?

June 5, 2026
கதிர்காமம் சென்று திரும்பும் வழியில் விபத்து! 15 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் !

புத்தளத்தில் கொடூர விபத்து: தாயும் மகளும் பரிதாபமாக உயிரிழப்பு!

June 5, 2026
2ஆவது ஆர்ப்பாட்டக்காரருக்கும் ஈரானில் தூக்கு

ஈரான் போர் – அமெரிக்க சபையில் முக்கிய தீர்மானம்

June 5, 2026
முச்சக்கரவண்டி மீது மரம் முறிந்து வீழ்ந்து விபத்து – மூவர் உயிரிழப்பு!

முச்சக்கரவண்டி மீது மரம் முறிந்து வீழ்ந்து விபத்து – மூவர் உயிரிழப்பு!

June 5, 2026

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version