அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்றுடன் (10) நிறைவடைகின்றன.
இந்த அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை தொடர்ந்து, ஏப்ரல் 20 ஆம் திகதி திங்கட்கிழமை அன்று மீண்டும் பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் ஆரம்பமாகும் என அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
