கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களுக்கு இடையே மோதல்

கொழும்பு மாநகர சபையின் இரண்டு உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் காயமடைந்த ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில்; அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று (09) மாலை இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாய்த்தர்க்கம் ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை

சம்பவம் தொடர்பாக கறுவாத்தோட்டம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Exit mobile version