புறக்கோட்டையில் புதுப்பிக்கப்பட்ட பேருந்து நிலைய வளாகத்தில் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்திய குற்றத்துக்காக களனியில் கைது செய்யப்பட்ட 33 வயது நபர், கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தால் ஏப்ரல் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல மில்லியன் செலவில் புனரமைக்கப்பட்ட பேருந்த நிலையம் அண்மையில் மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
