கஞ்சிபானை இம்ரானின் உதவியாளர் கைது!

கொழும்பு பகுதியில் குண்டு ஒன்றை வெடிக்க வைக்க திட்டமிட்டதாக கூறப்படும் சந்தேக நபரொருவர் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற குழு உறுப்பினரான கஞ்சிபானை இம்ரானின் வழிகாட்டலுக்கமைய இந்த தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Exit mobile version