2026 ஏப்ரல் 24 முதல் 30 வரை உலக நோய்த்தடுப்பு வாரம் அனுசரிக்கப்படுகிறது. “தலைமுறை தலைமுறையாகப் பாதுகாப்பு வழங்கும் தடுப்பூசிகள்” என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.
சரியான நேரத்தில் தேவையான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வது முக்கியம் என சுகாதார அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகம் மக்கள் அனைவரும் தங்களும், தங்கள் குடும்பத்தினரும் நோய்களிலிருந்து பாதுகாப்பாக இருக்க, பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசிகளை தவறாமல் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.
