உலக சுகாதார அமைப்பின் (WHO) நிபுணர் குழு தனது முன்னேற்ற மீளாய்வை உத்தியோகபூர்வமாக நிறைவு செய்துள்ளது.
மீளாய்வுப் பரிந்துரைகளின் அடிப்படையில், நாட்டின் சுகாதார வலையமைப்பைத் திறமையான மற்றும் மக்கள் சார்ந்த அமைப்பாக மேலும் மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சுகாதார அமைப்பின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும், நாட்டின் சுகாதார அமைப்பை மேலும் வலுப்படுத்துவதற்குமான பரிந்துரைகளை வழங்குவதற்கும் இலங்கைக்கு வருகை தந்த உலக சுகாதார அமைப்பின் (WHO) சர்வதேச நிபுணர் குழு, தனது மீளாய்வை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
தனது முன்னேற்ற மீளாய்வை உத்தியோகபூர்வமாக நிறைவு செய்துள்ள (WHO) நிபுணர் குழு
