MoP உரம் இன்று முதல் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது

பெரும் போகத்திற்கான மியூரேட் ஆஃப் பொட்டாஷ் (MoP) உரத்தை விவசாயிகளுக்கு வழங்கும் பணியை அரசாங்கம் இன்று முதல் வழங்கவுள்ளது.

41,876 மெட்ரிக் தொன் MoP உரம் கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

அதன்படி இன்று முதல் விவசாயிகளுக்கு உர இருப்புக்கள் விநியோகிக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த சில நாட்களில் விவசாயிகளுக்கு 16,500 மெட்ரிக் தொன் யூரியா உரம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

அனுராதபுரம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 1,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் இன்று விநியோகிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வாரம் 16,000 மெட்ரிக் தொன் மற்றும் 9,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தின் இரு இறக்குமதிகள் கொழும்பு துறைமுகத்திற்கு வந்தன.

பெரும் போகத்தில் விவசாயிகளுக்கு போதிய அளவு உரங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

Exit mobile version