பெலியத்தவில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த ரஜரட்ட ரஜின விரைவு ரயிலுடன் இன்று பிற்பகல் குடும்பஸ்தர்கள் சென்ற கார் மோதியதாக களுத்துறை வடக்கு காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஐந்து நாட்களுக்கு முன்னர் கொஸ்கசந்திய பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானநிலையில் இன்று அதே இடத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என காவல்துறையினர்தெரிவித்தனர்.
கொழும்பில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் வஸ்கடுவ பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு விஜயம் செய்ய வந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கார் கரையோரத்தில் இருந்து புகையிரத கடவையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்ததாகவும், சாரதி ரயிலைக் கண்டதும் அதனைப் பின்னோக்கிச் செலுத்த முற்பட்ட போது விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.




Discussion about this post