தெற்கு அதிவேக வீதியில் தனியார் பேருந்து ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெலியத்த மாற்றுப்பாதைக்கு அருகில் குறித்த பேருந்து திடீரென தீப்பிடித்துள்ளதாக அதிவேக வீதி பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும், பேருந்து தீப்பிடித்ததையடுத்து, பயணிகள் அனைவரும் அதிலிருந்து வெளியேறியதுடன், தீயினால் யாருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.
எனினும், தீ விபத்தால் பேருந்து பலத்த சேதமடைந்தது.
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்றே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Discussion about this post