அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள நெல் களஞ்சியசாலைகளை திறந்து, விவசாயிகளிடமிருந்து பெரும்போக நெல்லை அரசாங்கம் உத்தரவாத விலைக்கு கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக, திட்டமட்ட விவசாய அமைப்பின் செயலாளர் ஏ.எல்.எம்.என்.அஹமட் தெரிவித்தார்.
தற்போது அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், நெல்லை கொள்வனவு செய்வதற்காக அம்பாறை மாவட்டத்திலுள்ள நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியசாலைகளை திறந்து உத்தரவாத விலைக்கு நெல்லை கொள்வனவு செய்யுமாறு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபயவிக்கிரமவிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதற்கமைய உத்தரவாத விலைக்கு பெரும்போக நெல்லை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமென்று அவர் உறுதி அளித்துள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.











Discussion about this post