பல தசாப்தங்களில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளப்பெருக்கிலிருந்து மீள்வதற்கு சுற்றுலா ஒரு முக்கிய உந்து சக்தியாக உருவெடுத்துள்ளது.
இதனால், சர்வதேச பயணிகள் இலங்கைக்குத் திரும்புமாறு கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கார நேற்று (17) வலியுறுத்தினார்.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு வீடியோ செய்தியில் முன்னாள் தேசிய வீரர், நவம்பர் மாத இறுதியில் தாக்கிய டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவைப் பற்றி உரையாற்றினார்.
நான் இலங்கைக்குச் செல்ல வேண்டுமா?” என்று நினைக்கும் வெளிநாட்டில் உள்ள அனைவருக்கும், இலங்கை திறந்திருக்கும் மற்றும் பாதுகாப்பானது.
உங்களை வரவேற்றக நாடு தயாராகவுள்ளது என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.
உங்கள் வருகை உள்ளூர் சமூக புத்துணர்ச்சியை நேரடியாக ஆதரிக்கிறது – என்றார்.
நவம்பர் 29 அன்று அரசாங்கம் நாடு தழுவிய அவசரகால நிலையை அறிவித்த போதிலும், நாடு இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதாக சுற்றுலா அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அனைத்து முக்கிய கலாச்சார தளங்களும் முழுமையாக திறந்துள்ளன.
சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் முக்கிய வீதிகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் முழுமையாக இயங்குகின்றன.












Discussion about this post